Sunday 7 May 2023

பிறந்தநாள் வாழ்த்து

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் எழுதிய மரபுக் கவிதை. இது அறுசீர் விருத்தம் என்ற வகைமையுள் வரும் கவிதை. தமிழின் பாவகைகளுள் ஒன்றான ஆசிரியபாவின் இனங்களில் ஒன்று. இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் கொண்டு அமையும். மோனை வெளித்தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.


காரையம் பதியில் தோன்றி

    கவின்சுவிஸ் வாழ்க்கை கண்டு

பாரையும் விண்ணும் சேர்த்து 

    பண்பினால் ஆளும் அண்ணன்

மோரையும் ஒத்த வண்ண 

    மனதினை கொண்ட மன்னன்

சீரையும் சிறப்பும் கண்டு 

    செகந்தனில் நிறைக மாதோ!


- குகதாசன் குமரன் (06/05/2023)

No comments:

Post a Comment